மட்டக்களப்பு நகரிலுள்ள 7 உணவகங்களுக்கு அபராதம் விதிப்பு
மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத்தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட 7 உணவகங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாகச் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று(02) உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நகர்ப்பகுதியிலுள்ள உணவகங்களை இன்று திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட பிரபல்யமான 3 உணவகங்கள் உட்பட 7 உணவகங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா
வீதம் 70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாகச் செலுத்துமாறு நீதவான் ஏ.சி.எம்.
றிஸ்வான் உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளார்.






டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 16 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam