மட்டக்களப்பு நகரிலுள்ள 7 உணவகங்களுக்கு அபராதம் விதிப்பு
மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத்தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட 7 உணவகங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாகச் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று(02) உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நகர்ப்பகுதியிலுள்ள உணவகங்களை இன்று திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட பிரபல்யமான 3 உணவகங்கள் உட்பட 7 உணவகங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா
வீதம் 70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாகச் செலுத்துமாறு நீதவான் ஏ.சி.எம்.
றிஸ்வான் உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளார்.






இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri