புதுக்குடியிருப்பில் கைப்பற்றப்பட்ட கசிப்பு: 7 பேர் கைது
முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பில் பல குற்றங்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 43 லீ்ட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு 9ஆம்,10ஆம் வட்டார பகுதிகளில் பொலிஸார் இராணுவத்துடன் இணைந்து இன்று (04.07.2024) காலை 5.00 மணி தொடக்கம் ஆறு மணி வரை விசேட சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதன்போது, திறந்த பிடியாணை நபர்கள் இருவர், பொலிஸாரினால் ஒருநாள் பிணையில் விடுவிக்கப்பட்ட 3 நபர்கள் மற்றும் திருகோணமலையை சேர்ந்த பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவருமாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இந்த நடவடிக்கையின் போது சுமார் 43 லீட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam