கிளிநொச்சி மாவட்டத்தில் 64 பேருக்கு தொற்று
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றும் இன்றும் வெளிவந்த பிசிஆர் முடிவுகளின் படி 64 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை, அறிவியல் நகரில் உள்ள பழச்சாறு உற்பத்தி நிறுவனம் மற்றும் சாந்தபுரம் கிராமத்தில் என அதிக தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் தொற்று ஏற்படுகின்றவர்களில் பெரும்பாலானவர்களை அவதானிக்கின்ற போது அவர்கள் சுகாதார நடைமுறைகளை கவனத்தில் எடுத்து நடந்துகொள்ளாதவர்கள் என்றே அறிய முடிகிறது என அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள்
தொற்று அதிகரித்துச் செல்கின்றமையால் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை
கண்டிப்பாக பின்பற்றி நோய்பரவுவதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சுகாதார
பிரிவினருக்கு உதவ வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.