வருடாந்தம் வீசப்படும் பெருந்தொகையான பிளாஸ்டிக் கரண்டிகள்
இலங்கையின் சுற்றுச்சூழலில் வருடாந்தம் சுமார் 600 மில்லியன் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கரண்டிகள் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஒரு மாதத்திற்கு சுமார் 50 மில்லியன் பிளாஸ்டிக் கரண்டிகள் பயன்பாட்டிற்குப் பிறகு சுற்றுச்சூழலுக்கு விடப்படுகின்றது.
குறிப்பாக தயிர், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களுக்காகவும், உணவு பதப்படுத்துபவர்களாலும் பிளாஸ்டிக் கரண்டிகள் பெரும்பாலும் நுகர்வோருக்கு வழங்கப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை.
இதே அளவு பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் சுற்றுச்சூழலுக்கு விடப்படுகின்றது. எனவே பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan