அமெரிக்காவின் C-130 விமானத்தில் இலங்கைக்குள் நுழைந்த 60 விசேட இராணுவம்!
டித்வா புயல் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக இலங்கை்கு அமெரிக்க விமானங்கள் வந்திறங்கியுள்ளன.
அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான பதிலளிப்புக் குழுவினைச் (CRG) சேர்ந்த விமானப் படை வீரர்களும் நேற்றையதினம்(7) கட்டுநாயக்க விமானத்தளத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில்,அமெரிக்காவினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள விமானம் ஒன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று(8) தரையிறங்கியுள்ளது.
இலங்கை தற்போது யார் உதவிகரம் நீட்டினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது என்று பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ்,தெரிவித்தார்.
எல்லா நாடுகளும் தங்களை நிலைநிறுத்துவதற்கான போட்டிகளமாக இது மாறியுள்ளது என்றார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan