தொழிற்சாலையில் திடீரென சுகயீனமடைந்த 60 பேர்
மாத்தளை, பலாபத்வல பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 60 பேர் திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.
இன்றைய தினம் திடீர் சுகயீமடைந்த ஊழியர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொழற்சாலை ஊழியர்களுக்கு கடந்த 16ஆம் திகதி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலும் இன்றைய தினமும் ஊழியர்கள் பல்வேறு உடல் நிலை பாதிப்புகள் ஏற்பட்டமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர.
எனினும் ஊழியர்கள் ஆபத்தான நிலைமையில் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வாமை மற்றும் அலர்ச்சி காரணமாக இந்த ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.