அதிகரிக்கும் அதிவேக நெடுஞ்சாலை விபத்துகள்

Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu Jan 26, 2024 05:27 PM GMT
Report

கடந்த 26 நாட்களில் நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்ததாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த ஆண்டு அதிவேக நெடுஞ்சாலைகளில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது வீதிகளில் வாகனங்களுக்கு இடையில் சரியான இடைவெளியை பேணாமையே பல விபத்துக்களுக்கு காரணம் என வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சுமந்திரன் - சிறீதரன் வழங்கிய அதி முக்கிய உத்தரவாதம்

சுமந்திரன் - சிறீதரன் வழங்கிய அதி முக்கிய உத்தரவாதம்

பொலிஸார் தகவல்

இதேவேளை, நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை இடமாறல்களில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான வீதி விளக்குகள் செயலிழந்துள்ளமையினால், அப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை கூறியுள்ளது.

மேலும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் இரகசியமான முறையில் மின்சார கம்பிகளை அறுத்து இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் அதிவேக நெடுஞ்சாலை விபத்துகள் | 6 People Have Died On The Expressway

இந்நிலையில், ஹோமாகம - நியந்தகல அதிவேக மேம்பாலத்தில் நேற்று காலை 1,50,000 ரூபா பெறுமதியான உயர் அழுத்த மின் கம்பியின் ஒரு பகுதி அறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தொடு கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதி சம்பவ இடத்திற்கு வந்தவுடன், கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த 3 பேர் தப்பியோடியுள்ளதுடன், சந்தேக நபர்களைக் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (26.01.2024) காலை இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து சென்னை சென்ற யுவனுக்கு விமான நிலையத்தில் தடங்கல்

கொழும்பிலிருந்து சென்னை சென்ற யுவனுக்கு விமான நிலையத்தில் தடங்கல்

சனத் நிஷாந்த

மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று லொறியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடவத்தை மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையில் 27.1 மைல்கள் பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிகரிக்கும் அதிவேக நெடுஞ்சாலை விபத்துகள் | 6 People Have Died On The Expressway

வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற வேன், கொள்கலன் பெட்டி இணைக்கப்பட்ட லொறியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய லொறி தொழில்நுட்பக் கோளாறால் வீதியின் இடதுபுறம் நின்ற போது பின்னால் வந்த வேன் மோதியுள்ளது. ஹிக்கடுவையில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த ஒஸ்ரிய நாட்டை சேர்ந்த குடும்பமே விபத்துக்குள்ளான வேனில் பயணித்துள்ளது.

இந்த விபத்தில், வேனில் பயணித்த 37 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளதுடன், அவரது தாயும், வேனின் சாரதியான இலங்கையரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் தந்தைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் நேற்று காலை அதிவேக வீதியில் பயணித்த போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்ததாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பு பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பு பெண் கைது


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US