அறுகம்குடா மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் 6 பேர் கைது
தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் வெளிநாட்டவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அறுகம்குடா பகுதியில் தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் கொழும்பில் உள்ள மூலோபாய பொருளாதார இடங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பான புலனாய்வு அறிக்கைகளை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழுவில் மாலைத்தீவு நாட்டவர் மற்றும் ஐந்து இலங்கையர்கள் உள்ளடங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசாரணை
அவர்கள் அனைவரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்களின் நோக்கங்கள் குறித்து அதிகாரிகள் கண்டறியவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
