ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் நீக்கம்: பொலிஸாரின் நடவடிக்கை
ஜனாதிபதி தேர்தல் குறித்து சட்டவிரோதமான வகையில் ஒட்டப்பட்டிருந்த சுமார் 627,300 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன், 7,900 சுவரொட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, 1,500 பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதுடன் 1,100 பதாகைகள் பொலிஸார் கைப்பற்றி வைத்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு
இந்நிலையில், மொத்தம் 1,550 விளம்பர பதாகைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளதுடன் அவற்றில் 1,600 விளம்பர பதாகைகள் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளன.
அதுமாத்திரமன்றி, 7,600 விளம்பரங்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ள நிலையில் 10,750 விளம்பரங்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முதல் நேற்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
