இலங்கையில் 5 ஜீ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுவதில் சிக்கல்
இலங்கையில் 5ஜீ (5G) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் நிச்சயமற்றத்தன்மை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
5 ஜீ தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்கான உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
இதனால் எப்பொழுது இலங்கையில் 5ஜீ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றிய தகவல்களை வெளியிட முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு பெருமளவு செலவுகள் ஏற்படும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், அரசாங்கமும் தொலைதொடர்பு நிறுவனங்களும் இந்த சேவையை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதிலும் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு பாரியளவில் முதலீடு செய்ய நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
5 ஜீ சேவைக்கட்டணம் அதிகரிக்கக்கூடும்...
5 ஜீ சேவைக்கான கட்டணங்களும் அதிகமாக காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

5 ஜீ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான நிலைமை உருவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் 5 ஜீ தொழில்நுட்பம் வெற்றிகரமான முறையில் பரிசோதனை செய்யப்பட்ட நாடாக இலங்கை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam