தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகளின் அடிப்படையில் 55 பேர் கைது
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகளின் அடிப்படையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் வேட்பாளர்கள் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், 11 வாகனங்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. போலீசாருக்கு இதுவரை மொத்தமாக 123 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவை மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 9ஆம் திகதி காலை 6.00 மணி வரை பதிவாகிய குற்றச் செயல்களாகும்.
இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 24 வன்முறை சம்பந்தமானவை, 99 தேர்தல் சட்ட மீறல்கள் சம்பந்தமானவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.