சொத்து விபரங்களை வெளியிடாத அரசியல்வாதிகள்
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 53 பேர் சொத்து விபரங்களை வெளியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரையில் தங்களது சொத்து விபரங்களை வெளியிடவில்லை என இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையில் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் மோசடி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்.
இந்த சொத்து விபரங்கள் குறித்து இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்வது வழமையானது ஆகும்.
நடாளுமன்ற பணியாளர்கள், தேர்தல் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் பிரதமர் அலுவலக பணியாளர்கள் ஆகியோரும் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
