சொத்து விபரங்களை வெளியிடாத அரசியல்வாதிகள்
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 53 பேர் சொத்து விபரங்களை வெளியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரையில் தங்களது சொத்து விபரங்களை வெளியிடவில்லை என இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையில் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் மோசடி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்.
இந்த சொத்து விபரங்கள் குறித்து இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்வது வழமையானது ஆகும்.
நடாளுமன்ற பணியாளர்கள், தேர்தல் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் பிரதமர் அலுவலக பணியாளர்கள் ஆகியோரும் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
