இலங்கைக்கு நெருக்கடி - மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியுள்ள முக்கிய அமைப்புகள்

Human Rights Council Ranil Wickremesinghe Sri Lanka OHCHR
By Murali Sep 13, 2022 07:05 PM GMT
Report

இலங்கை தொடர்பில் வலுவான நிலைப்பாட்டை எடுக்குமாறு நான்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஃபோரம் ஆசியா, மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் சர்வதேச நீதிபதிகள் ஆணையம் ஆகிய நான்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவது உட்பட, இலங்கையில் இடம்பெற்று வரும் துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காணுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடம் கோருகின்றனர்.

இலங்கைக்கு நெருக்கடி - மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியுள்ள முக்கிய அமைப்புகள் | 51St Session Of The Un Human Rights Council

பல ஆண்டுகளாக நீதியை கோரும் மக்கள் 

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் மிகக் கடுமையான பொருளாதார, அரசியல் மற்றும் மனித உரிமை நெருக்கடிகளை எதிர்கொண்டார்.

இதனையடுத்து பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2022 ஜூலையில் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவருக்குப் பின் வந்த ரணில் விக்ரமசிங்க, கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடலை ஒடுக்குவதற்கு நிர்ப்பந்த நடவடிக்கைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையில், செப்டம்பர் 6 அன்று, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் மிச்சல் பச்லெட் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

இலங்கையர்கள் அதிக வெளிப்படைத்தன்மை, ஊழல் மற்றும் பொருளாதார தவறான நிர்வாகத்திற்கு பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகத்தில் அதிக பங்கேற்பைக் கோரி ஒரு வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

இந்த அறிக்கையின் மூலம், எதிர்ப்பாளர்களின் உரிமைகளை மதிக்கவும், கடந்த கால மீறல்களுக்கான தண்டனையை முடிவுக்குக் கொண்டுவரவும், தற்போதைய நெருக்கடியின் மூல காரணங்களைத் தீர்க்கவும் அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் பல்வேறு துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக நீதி கோரி வருகின்றனர்.

மேலும் அடுத்தடுத்த அரசாங்கங்கள் வாக்குறுதிகளை மீறியுள்ளன, பொறுப்புக்கூறலைத் தடுத்து, போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை உயர்த்தியுள்ளன" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி கூறுகிறார்.

இலங்கைக்கு நெருக்கடி - மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியுள்ள முக்கிய அமைப்புகள் | 51St Session Of The Un Human Rights Council

ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்." என அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு 

செப்டெம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில், உறுப்பு நாடுகள் மார்ச் 2021 தீர்மானத்தை மீளாய்வு செய்து புதுப்பிக்கும் மற்றும் இலங்கையில் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களின் ஆதாரங்களை சேகரித்து எதிர்கால வழக்குகளில் பயன்படுத்த ஐ.நா பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஃபோரம் ஆசியா, மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் சர்வதேச நீதிபதிகள் ஆணையம் ஆகியவை இந்த முன்மொழிவை புதுப்பிக்கப்பட்டு கூடுதல் ஆதாரங்களுடன் பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் தனது அறிக்கையில் "ஆழ்ந்த இராணுவமயமாக்கல் மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமை, கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனையின்மை உட்பட, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கான சூழலை எவ்வாறு உருவாக்கியுள்ளது" என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கு நெருக்கடி - மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியுள்ள முக்கிய அமைப்புகள் | 51St Session Of The Un Human Rights Council

மேலும், 250க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளை விசாரிக்க சர்வதேச முறைக்கு அழைப்பு விடுக்கும் உயர்ஸ்தானிகர், இலங்கை பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறித்து இன்னும் பதிலளிக்கப்படாத கேள்விகள் இருப்பதாக கூறுகிறார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சர்வதேச நீதியரசர்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மஸ்ஸிமோ ஃப்ரிகோ, இலங்கையர்களுக்கு தண்டனையிலிருந்து விடுபடுவதற்கும் அவர்களுக்கு நீதி வழங்குவதற்கும் அவசர சர்வதேச நடவடிக்கை தேவை என்ற தெளிவான கண்டுபிடிப்புகளை உயர்ஸ்தானிகர் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 21 அன்று ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை வன்முறையில் கலைக்கவும், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெருமளவிலான மக்களைக் கைது செய்யவும் பயன்படுத்தியதாக அறிக்கை கூறுகிறது.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மூன்று மாணவர் தலைவர்களை எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்கும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜூன் மாதம் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தற்போதைய வெளிவிவகார அமைச்சரும், அப்போதைய நீதி அமைச்சருமான அலி சப்ரியும் இதே உறுதிமொழியை மார்ச் மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் வழங்கினார்.

மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு பதவி 

இதேவேளை, செப்டெம்பர் 8ஆம் திகதி, மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய மூவரை அரசாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

இவர்களில் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேஷ்துரை சந்திரகாந்தன், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன், சிறுவர் சிப்பாய்களை கடத்திச் சென்று பணியில் சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நெருக்கடி - மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியுள்ள முக்கிய அமைப்புகள் | 51St Session Of The Un Human Rights Council

செப்டம்பர் 2021ல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவத்திற்குப் பிறகு சிறைச்சாலைகள் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த லொஹான் ரத்வத்தவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, கடந்த மே மாதம் 9ஆம் திகதி அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் தொடர்பாக பொலிஸாரால் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சனத் நிஷாந்தவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சு நியமனங்கள், ரணில் விக்ரமசிங்க நிர்வாகம் மனித உரிமை மீறல்களுக்கு நம்பகத்தன்மையுடன் பொறுப்புக்கூற வேண்டும் அல்லது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டுமென எதிர்பார்க்க முடியாது என்று ஃபோரம் ஆசியாவின் ஐ.நா ஆலோசனை திட்ட மேலாளர் அஹமட் ஆடம் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US