மின்சாரக் கட்டண உயர்வினால் 50000 கோடி வருமானம்
மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதன் ஊடாக இலங்கை மின்சார சபையின் வருமானம் மாதாந்தம் 50000 கோடி ரூபாவினால் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்சார சபையின் நட்டம்
தற்பொழுது இலங்கை மின்சார சபை மாதாந்தம் 60000 கோடி ரூபா வரையில் நட்டமடைந்து வருகின்றது.
தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட காரணிகளினால் ஆண்டு தோறும் மின்சார சபை அடையும் நட்டம் அதிகரித்துச் செல்கின்றது.

நுகர்வோருக்கு சிரமம்
இதேவேளை, மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் மின்சாரக் கட்டணங்களை செலுத்துவதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு கைத்தொழில்துறை மற்றும் வர்த்தகதுறை போன்றவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட பணியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| மின் கட்டண உயர்வு: ஆகஸ்ட் 29 விவாதம் |
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam