குறைந்த வருமானம் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய்
சமூர்த்தி உதவிக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்காக நேற்றைய தினம் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது.
சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரிசி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் காமினி லோகுகே, எரிபொருள் விலை அதிகரித்த போதிலும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க எந்த முடிவும் எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam