அடுத்த வருடம் இலங்கைக்கு கிடைக்கவுள்ள 500 மில்லியன் டொலர் வருமானம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அடுத்த வருடம் மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத்தருவதாகவும், இல்லை என்றால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள கற்கள் (இரத்தினங்கள்) நாட்டை விட்டு வெளியே போயுள்ளன. ஆனால் எங்களுக்கு 170 மில்லியன் டொலர்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த டொலர்கள் இலங்கைக்கு வருவதில்லை.இது குறித்து விவாதம் நடத்தி வருகின்றோம்.
இந்த நாட்டிற்கு 180 நாட்களுக்குள் டொலர் வர வேண்டும். எனது முயற்சியால் அடுத்த ஆண்டு நாட்டிற்கு 500 மில்லியன் டொலர்களைக் கண்டுபிடிப்பேன் என்று உறுதியாகச் சொல்கின்றேன். 500 மில்லியன் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.