இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது
இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள், நேற்று பிற்பகல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
வணிக விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்து, விசாக்கள் காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் 47 சீன நாட்டவர்களும், இரண்டு மலேசியர்கள் மற்றும் ஒரு இந்தியரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டவர்கள் கைது
நீர்கொழும்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த போது குறித்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam