17 வருட போர் வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜனாதிபதி விசேட உத்தரவு
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முப்படைச் சிப்பாய்களுக்கு பதவி உயர்வுகளை வழங்குவதற்கான உத்தரவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கைச்சாத்திட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான ஆயுதப் போர் வெற்றியை முன்னிட்டு வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் போர் வெற்றிக் கொண்டாட்டங்களின் 17வது வருட நிறைவுக் கொண்டாட்டம் இன்று(19.05.2026) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
5 ஆயிரம் சிப்பாய்களுக்கு பதவி உயர்வு
இந்த தினத்தை முன்னிட்டு இந்த வருடம் 5000 -க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போர் வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு வருடாந்தம் முப்படைத் தளபதிகளின் சிபாரிசுகளுக்கு அமைய குறித்த பதவி உயர்வுகள் வழங்கப்படும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அதன் பிரகாரம் இந்த வருடம் இலங்கையின் முப்படைகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 5,189 சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்கும் உத்தரவொன்றில் முப்படைகளின் பிரதம தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam