மட்டக்களப்பு நகரில் சுகாதாரம் இல்லாத உணவகம் ஒன்றுக்கு எதிராக அபராதம் விதிப்பு!
மட்டக்களப்பு நகரில் சுகாதாரம் இல்லாத உணவகம் ஒன்றுக்கு எதிராக 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த உணவகத்தை 14 நாட்களுக்கு மூடி சீல் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தை மட்டு பொது சுகாதார பரிசோதகர்கள் முற்றுகையிட்டு சோதனை நடத்தியபோது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை வழங்கி வந்துள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.
அபராதம்
இதனையடுத்து, உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத் வைத்திருந்தமை, உணவு உற்பத்தி செய்யும் இடங்கள் பீடைகள் தொற்று வாய்ப்பு உள்ளதாகவும், உணவுடன் நேரடி தொடர்புடைய பணியாற்றும் மேற்பரப்புக்கள் நோய் பரவு கூடியதாகவும் தூய்மை இன்றி காணப்பட்டது, மலசல கூடம் முன்னால் நேரடியாக உள்ள இடப்பரப்பில் உணவு உற்பத்தி செய்தமை, உணவு உற்பத்தி செய்யும் இடமானது திண்ம, திரவ, வாயு கழிவுகளை அப்புறப்படுத்த முடியாத இடப்பரப்பில் காணப்பட்டமை ஆகிய 5 குற்றச்சாட்டுகள் முன்வைத்து வழக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தாக்குதல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் குறித்த உணவக உரிமையாளரை அபராதமாக 50 ஆயிரம் ரூபா செலுத்துமாறும் உணவகத்ததை தற்காலிகமாக 14 நாட்டகளுக்கு மூடி சீல் வைக்குமாறு கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களான பி. மிதுனன்ராஜ், கே.யசோதரன், ஆர் இன்பராசா ஆகியோர் கடையை முடி சீல் வைத்தனர்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam