கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் 5 வயது குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்
கொழும்பில் உள்ள மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 5 வயது குழந்தையொன்று வான் மோதி உயிரிழந்துள்ளது.
நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் மூன்றாவது குழந்தையான நிவேன் மின்னஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வான் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

வான் சாரதி பொலிஸாரால் கைது
இந்த விபத்தில் குழந்தைக்கு மேலோட்டமான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்த நிலையில், இரத்த வாந்தி எடுத்ததால் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து 50 வயதுடைய வான் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் போதைப்பொருள் அல்லது மது அருந்தியிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri