உழவியந்திரத்தில் சிக்கி ஐந்து வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம் (Video)
வவுனியா, ஓமந்தை பாலமோட்டை பகுதியில் உழவியந்திரத்தில் தவறி வீழ்ந்து 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள காணியொன்றினை உழவியந்திரத்தின் மூலம் பண்படுத்தும் நடவடிக்கையில் அதன் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது வாடகைக்கு அமர்த்தப்பட்ட குறித்த உழவியந்திரத்தின் சாரதி காணியின் உரிமையாளரது மகனையும், அவரது உறவினரது மகனையும் உழவியந்திரத்தில் ஏற்றியபடி நிலத்தினை பண்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது இரு சிறுவர்களில் ஒருவன் திடீர் என கீழே தவறி வீழ்ந்து உழவியந்திரத்திற்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
எனினும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படபோதும் குறித்த சிறுவன் முன்னரே மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாலமோட்டை பகுதியை சேர்ந்த கந்தலதன் கனிஸன் (வயது 5) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
