ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையிலிருந்து இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்த வண்ணம் உள்ளனர்.
தனுஷ்கோடியில் தஞ்சம்
இவர்கள் இன்று (24.11.2022) அதிகாலை 5 மணிக்கு படகு மூலம் புறப்பட்டு சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களில் 3பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வன்னெரிக்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ரஜிந்தி கணேசமூர்த்தி, கஜானா
கணேசமூர்த்தி, டயானா கணேசமூர்த்தி, சாய்சன்
கணேசமூர்த்தி ஆகியோரே இவ்வாறு தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.