ஆப்பிரிக்க நாட்டில் 46 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பதிலடி தாக்குதலில் 10 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடான மாலியில் 46 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், பதிலடி தாக்குதலில் 10 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2020 ஆம் ஆண்டு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு இராணுவ ஆட்சியில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாதிகள் தலைதூக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நாட்டின் சாகல் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் பயங்கரவாதிகளை ஒழிக்க இராணுவத்தினர் கடுமையாக முயற்சித்து வரும் நிலையில் இருதரப்புக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

தற்கொலை தாக்குதல்
இந்த நிலையில் கவோ பகுதியின் போரெம் நகரில் இராணுவ வீரர்கள் கவச வாகனங்களில் ரோந்துப்பணியினை மேற்கொண்ட நிலையில், பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் பொருத்திய வாகனங்களில் இராணுவ வீரர்களின் வாகன அணிவகுப்பிற்குள் திடீரென புகுந்து தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது இராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சண்டையில் 46 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இராணுவ உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், தாக்குதலில் துரதிர்ஷ்டவசமாக 10 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri