நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா! 40 படகுகளுக்கு சேவையில் ஈடுபட அனுமதி
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளதால், குறிகாட்டுவானிலிருந்து நயினாதீவுக்கு 40 படகுகள் பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் பெருந்திருவிழா எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பயணிகள் பயணிப்பதற்கு ஏற்புடைய படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் கப்பற்துறை வணிக அமைச்சின் செயலகத்தில் இருந்து பெறபட வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
40 படகுகள் சேவை
இதனடிப்படையில் கச்சதீவு பெருநாளையொட்டி 21 படகுகள், பயணிகளின் பயணத்துக்கு ஏற்றவை என அனுமதிக்கப்பட்டிருந்தன.
நயினாதீவு பெருந்திருவிழாவுக்கு இம்முறை மேலதிகமாக 21 படகுகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 19 படகுகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
இரு படகுகளுக்கு திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் உற்சவ காலத்தில் 40 படகுகள் சேவையில் ஈடுபடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |