இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு பார்த்த நால்வருக்கு ஈரான் வழங்கிய தண்டனை
இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு வேளையில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட நால்வருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை விதித்துள்ளது.
இந்த தூக்கு தண்டனை நேற்றையதினம் (29.12.2023) நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் அமைப்புக்கு உளவு வேலை பார்த்த 4 பேரை ஈரான் அரசு தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் அவர்களை 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்தனர்.

பல குற்றங்கள்
அவர்கள் மீது ஆள் கடத்தல், அச்சுறுத்தல், வாகனம் மற்றும் வீடுகளை எரித்தல், தொலைபேசி திருட்டு ஆகிய குற்றங்களை இஸ்ரேலுக்கு சார்பாக செய்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அது தொடர்பான வழக்கு நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணையின் தீர்ப்பில் ஈரானுக்கு எதிராக உளவு வேலை பார்த்தமைக்காக ஒரு பெண் உட்பட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam