இலங்கைக்குள் அத்துமீறி வந்த 4 இந்தியர்கள் விளக்கமறியல்...
இலங்கைக் கடற்பரப்புக்குள் படகு ஒன்றில் எல்லை தாண்டி உட்புகுந்த 4 இந்தியர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நெடுந்தீவுக்கும் கச்சதீவுக்கும் இடையே பயணித்த இந்தியப் படகை நேற்று(05) இரவு வழிமறித்த கடற்படையினர் அதில் பயணித்த 4 இந்தியர்களைக் கைது செய்து நெடுந்தீவுக்கு அழைத்து வந்தனர்.
நீதவான் முன்னிலையில்
மேற்படி 4 இந்தியர்களும் பயணித்த படகில் மீன்பிடி வலைகளோ அல்லது மீனோ காணப்படாதமையால் நெடுந்தீவுப் பொலிஸாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
நெடுந்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படக்கப்பட்ட 4 இந்தியர்களையும் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் இன்று மன்னிலைப்படுத்திய வேளை அவர்கள் நால்வரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்தியா மீதான 50% வரி: இது அரசியலமைப்பிற்கு எதிரானது! அமெரிக்க பொருளாதார நிபுணர் எதிர்ப்பு News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
