இலங்கைக்குள் அத்துமீறி வந்த 4 இந்தியர்கள் விளக்கமறியல்...
இலங்கைக் கடற்பரப்புக்குள் படகு ஒன்றில் எல்லை தாண்டி உட்புகுந்த 4 இந்தியர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நெடுந்தீவுக்கும் கச்சதீவுக்கும் இடையே பயணித்த இந்தியப் படகை நேற்று(05) இரவு வழிமறித்த கடற்படையினர் அதில் பயணித்த 4 இந்தியர்களைக் கைது செய்து நெடுந்தீவுக்கு அழைத்து வந்தனர்.
நீதவான் முன்னிலையில்
மேற்படி 4 இந்தியர்களும் பயணித்த படகில் மீன்பிடி வலைகளோ அல்லது மீனோ காணப்படாதமையால் நெடுந்தீவுப் பொலிஸாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
நெடுந்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படக்கப்பட்ட 4 இந்தியர்களையும் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் இன்று மன்னிலைப்படுத்திய வேளை அவர்கள் நால்வரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா





சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam
