தமிழர் பகுதிகளில் 36வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் தமிழர் பகுதிகளில் இன்று(19.06.2026) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா - தேக்கவைத்தையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் தொடர்பான நினைவு பேருரையும் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மன்னார்
ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஸ்தாபக தலைவர் கே.பத்மநாபா மற்றும் போராளிகளின் 36 ஆவது ஆண்டு தியாகிகள் தின நிகழ்வுகள் இன்று(19.06.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வுகள் மாலை 5.30 மணியளவில் மன்னாரில் நடைபெற்றுள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) மன்னார் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பத்மநாபா மற்றும் உயிரிழந்த போராளிகளை நினைவு கூர்ந்து, சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் உறுப்பினர்கள், மகளிர் அணியினர், உயிரிழந்த போராளிகளின் உறவுகள் என பலரும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலதிக தகவல் - ஆஷிக்
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan