கொக்கட்டிச்சோலை படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு (Video)
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் 36ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (28.01.2023) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆகிய கட்சிகள் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோவின் செயலாளர்
நாயகமுமான கோவிந்த கருணாகரம் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமையில் தமிழிரசுக்கட்சியின் நினைவேந்தல்
நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிர்நீர்த்தவர்களின் ஆத்ம சாந்தியடைய வேண்டி அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.
239 பேர் படுகொலை
28-01-1987 மற்றும் 12-06-1991ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இரால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் 239 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களில் சிறுவர்கள், பெண்கள்
மற்றும் முதியவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.