சீமெந்து இறக்குமதியை நிறுத்திய 35 நிறுவனங்கள்
இலங்கைக்கு சீமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிறுவனங்கள், சீமெந்து இறக்குமதியை இடைநிறுத்தியுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சில் நடந்த பேச்சுவார்த்தையில் தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு மாதம் ஒன்றுக்கு ஆறு லட்சம் சீமெந்து பொதிகள் தேவைப்படுகிறது. தேசிய ரீதியாக நான்கு லட்சம் சீமெந்து பொதிகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
தேவையான மீதமுள்ள இரண்டு லட்சம் சீமெந்து பொதிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளது.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த தொகையை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சீமெந்து பொதி ஒன்றின் விலை ஆயிரத்து 475 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் வர்த்தக சந்தையில் அதனை சுமார் இரண்டாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்து வருகின்றன.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
