சீமெந்து இறக்குமதியை நிறுத்திய 35 நிறுவனங்கள்
இலங்கைக்கு சீமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிறுவனங்கள், சீமெந்து இறக்குமதியை இடைநிறுத்தியுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சில் நடந்த பேச்சுவார்த்தையில் தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு மாதம் ஒன்றுக்கு ஆறு லட்சம் சீமெந்து பொதிகள் தேவைப்படுகிறது. தேசிய ரீதியாக நான்கு லட்சம் சீமெந்து பொதிகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
தேவையான மீதமுள்ள இரண்டு லட்சம் சீமெந்து பொதிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளது.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த தொகையை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சீமெந்து பொதி ஒன்றின் விலை ஆயிரத்து 475 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் வர்த்தக சந்தையில் அதனை சுமார் இரண்டாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்து வருகின்றன.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam