சீமெந்து இறக்குமதியை நிறுத்திய 35 நிறுவனங்கள்
இலங்கைக்கு சீமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிறுவனங்கள், சீமெந்து இறக்குமதியை இடைநிறுத்தியுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சில் நடந்த பேச்சுவார்த்தையில் தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு மாதம் ஒன்றுக்கு ஆறு லட்சம் சீமெந்து பொதிகள் தேவைப்படுகிறது. தேசிய ரீதியாக நான்கு லட்சம் சீமெந்து பொதிகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
தேவையான மீதமுள்ள இரண்டு லட்சம் சீமெந்து பொதிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளது.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த தொகையை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சீமெந்து பொதி ஒன்றின் விலை ஆயிரத்து 475 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் வர்த்தக சந்தையில் அதனை சுமார் இரண்டாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்து வருகின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri
