பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் நூற்றுக்கணக்கானோர் கைது!
நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (28) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 345 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 89 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 142 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 112 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 02 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 01 கிலோ 09 கிராம் 921 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும்,01 கிலோ 49 கிராம் 392 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 54 கிலோ 38 கிராம் 634 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 01 கிலோ ஹேஷ் போதைப்பொரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
