மொனராகலை பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 34 பேர் படுகாயம்
மொனராகலை - சியம்பலாண்டுவ புத்தமபகுதியில் இருந்து மொனராகலை நோக்கி பிரயாணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியது.
குறித்த சம்பவம் இன்று (29.02.2024) காலை 7.10 மணியளவில் இடம்பெற்றது.
பேருந்து வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 34 பேர் காயமடைந்த நிலையில் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், மொனராகலை நோக்கி பிரயாணித்த குறித்த பேருந்தில் சுமார் 45 பாடசாலை மாணவர்கள் உட்பட 80 பேர் பயணித்துள்ள நிலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மேலும், இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 34 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக சியம்பலாண்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam