இலங்கைக்குள் நுழைந்த 34 இஸ்ரேலியர்கள்! நெருக்கடியில் இந்தியா
இலங்கையின் அரசியல் பல்வேறு தளங்களில் பல்வேறுப்பட்ட விதமாக பேசப்படுகின்றது, இராணுவ புலனாய்வு சார்ந்தும் ஆங்காங்கே முக்கிய தகவல்கள் பகிரப்படுகின்றன.
அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் இஸ்ரேலியர்களின் தலையீடுகள் அதிகரிப்பதாக அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது மேலும் 34 இஸ்ரேலியர்கள் மீண்டும் அம்பாறைக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் , அமெரிக்கா, அவுஸ்திரேலியா வேறு வேறு இல்லை, ஒரு தரப்பு இலங்கை மீதான அழுத்தத்தை பிரயோகின்றது, மறு தரப்பு அந்த அழுத்தத்தை அவிழ்க முற்படுகின்றது என்று பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
அதனடிப்படையில் திட்டமிட்டு இலங்கையை அவர்களுக்கு கீழ் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன எனவும் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...