பிறந்து 34 நாட்களேயான குழந்தை பலியான சோகம்: யாழில் சம்பவம்
யாழ். பொன்னாலை மேற்கு பொன்னாலை பகுதியில், பிறந்து 34 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
விதுஜன் கிஷான் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவ தினமான நேற்றைய தினம் (01.05.2023) இரவு குறித்த குழந்தையின் மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறியுள்ளது.

உயிரிழந்ததற்கான காரணம்
இதனையடுத்து, உடனடியாக குழந்தை யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் என்ன என கண்டுபிடிக்கப்படாத நிலையில், குழந்தையின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri