சிஐடியில் ஆதாரத்துடன் பல தகவல்களை அம்பலப்படுத்தப்போகும் உதய கம்மன்பில
கொள்கலன்கள் பற்றிய விபரங்கள் அம்பலப்படுத்தப்படும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொள்கலன்கள் தொடர்பிலான விபரங்கள் ஆதாரத்துடன் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சாட்சியங்கள் இன்றி தகவல்களை வெளியிடுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு மூலமொன்றை அளிக்க
ஏதேனும் ஓர் வார்த்தை தவறினால் அதனைக் கொண்டு எம்மை சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொள்கலன்களை விடுவித்த நபரிடம் இந்த குற்றச் செயலுக்கு தண்டனை விதிக்கப்படாத என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எதனைக் கேட்க வேண்டுமெனத் தெரியாமல் கேள்விகளை கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தாம் அம்பலப்படுத்தி வரும் விடயங்களில் ஆறாவது விடயமாக சட்டவிரோதமாக கொள்கலன் விடுவிப்பு மற்றும் அவற்றில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் பற்றிய விபரங்களை இன்று வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்கு மூலமொன்றை அளிக்கச் செல்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |