பிள்ளைகள் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தந்தை - மனைவி மீதும் தாக்குதல்
களுத்துறை பிரதேச சபையின் மின்சார ஊழியரை அவர்களது இரண்டு பிள்ளைகளின் முன்னிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாள்கள் மற்றும் தடிகளுடன் வந்த ஆயுதமேந்திய குழு ஒன்று வீட்டிற்குள் புகுந்து, அவரை கொலை செய்த பின்னர் அவரது மனைவியை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை, பனாபிட்டிய, வத்தகொட பகுதியை சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுகத் பிரசன்ன என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள்: செம்மணி தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
ஆயுதக் குழு
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த ஆயுதக் குழுவே இந்தக் கொலையைச் செய்ததாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை நடந்த நேரத்தில் 16 வயது மகளும் 5 வயது மகனும் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் இருந்த நாயும் காணவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
கொலையாளிகள் முச்சக்கர வண்டியில் வந்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
