கிரீஸில் இரு தொடருந்துகள் மோதி பாரிய விபத்து: 32 பேர் பலி; 85 பேர் படுகாயம் (Video)
கிரீஸ் நாட்டின் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 85 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (28.02.2023) இரவு, கிரீஸ் - ஏதேன்சில் (Athens) இருந்து திஸ்லனொய்கி (Thessaloniki) நகரத்திற்கு 350 பயணிகளுடன் தொடருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
லரிசா (Larissa) நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் தொடருந்து சென்றுகொண்டிருந்தபோது, அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு தொடருந்து ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு...
இரு தொடருந்துகளும் நேருக்கு நேர் மோதியதால் தொடருந்தின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்தக் கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 85 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன், மேலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.







Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
