சர்வதேச கடற்பரப்பில் படகில் தத்தளித்த 300 இலங்கையர்களில் சிலரின் புகைப்படங்கள் வெளியானது (Photos)

Japan Singapore Vietnam
By Independent Writer Nov 09, 2022 01:35 AM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

கடல் மார்க்கமாக படகுகள் மூலம் வேறு நாடுகளுக்குள் செல்ல மேற்கொள்ளும் முயற்சி மிகுந்த ஆபத்து நிறைந்ததும் பயங்கரமானதுமாகும்.

எத்தனையோ படகுகள் கடலில் மூழ்கி பலர் இற்றைவரையும் காணாமல் போயுள்ளனர் சிலர் தங்கள் உயிர்களையும் இழந்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் பயணம் செய்பவர்கள் அந்நாட்டில் வசிக்கவோ, தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளவோ இடமளிக்கப்பட மாட்டார்கள். அத்தோடு இவ்வாறான சட்டவிரோதமான முயற்சியில் வேறு நாடுகளுக்குள் செல்ல முயற்சிப்பவர்கள் சட்டரீதியாக புலம்பெயர்வதற்கான ஏதேனும் வாய்ப்பையும் கூட சுயமாக இழந்து விடுவர். அந்தளவுக்கு ஒவ்வொரு நாட்டினுடைய சட்ட ஏற்பாடுகள் வலுவாக இருக்கும்.

இது தொடர்பில் மக்கள் விழிப்புடனும் முன் அவதானத்துடனும் செயற்பட வேண்டும். மோசடிக்காரர்களை நம்பி ஏமாந்து விடவோ, அதனால் பாதிக்கப்படவோ கூடாது. 

புதிய இணைப்பு

சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் சிலரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் அதிகளவானவர்கள் வடக்குக் - கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் எனவும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அகப்பட்டு சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படகு நடுக்கடலில் ஓட்டையானதையடுத்து கடலில் மூழ்க ஆரம்பிக்கவே வியட்நாம் அருகே ஜப்பான் மீட்பு குழுவால் மீட்டு தடுப்புக்காவலில் வைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கடற்பரப்பில் படகில் தத்தளித்த 300 இலங்கையர்களில் சிலரின் புகைப்படங்கள் வெளியானது (Photos) | 300 Sri Lankans Stranded In International Waters

சர்வதேச கடற்பரப்பில் படகில் தத்தளித்த 300 இலங்கையர்களில் சிலரின் புகைப்படங்கள் வெளியானது (Photos) | 300 Sri Lankans Stranded In International Waters

சர்வதேச கடற்பரப்பில் படகில் தத்தளித்த 300 இலங்கையர்களில் சிலரின் புகைப்படங்கள் வெளியானது (Photos) | 300 Sri Lankans Stranded In International Waters

முதலாம் இணைப்பு

சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள்

சிங்கப்பூருக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட கப்பலில் இருந்த 303 பேர் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அகதிகள் என சந்தேகிக்கப்படும் 300 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று வியட்நாம் - சிங்கப்பூர் எல்லையில் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வியட்நாம் அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை

இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வியட்நாம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரியும் உறுதிப்படுத்தினார்.

303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் நேற்று (திங்கட்கிழமை) வியட்நாம் மற்றும் சிங்கப்பூருக்கு அருகிலுள்ள கடலில் விபத்துக்குள்ளானது.

சர்வதேச கடற்பரப்பில் படகில் தத்தளித்த 300 இலங்கையர்களில் சிலரின் புகைப்படங்கள் வெளியானது (Photos) | 300 Sri Lankans Stranded In International Waters

இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்பு

கப்பல் ஆபத்தில் சிக்கியபோது, ​​அங்கிருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்தை தொடர்புகொண்டு, இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் இது தொடர்பாக வியட்நாம் கடற்படை மீட்பு நடவடிக்கை மையத்திற்கு தகவல் கொடுத்தனர். அப்போது வியட்நாமிய பிரதேசத்தில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்ததாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்பின்னர், வியட்நாம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா அரசாங்கங்களைத் தொடர்புகொண்டு குறித்த கப்பல் குறித்த தகவல்களைப் பரிமாறிக்கொண்டது.

இது தொடர்பில் அருகில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர், கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கடற்பரப்பில் படகில் தத்தளித்த 300 இலங்கையர்களில் சிலரின் புகைப்படங்கள் வெளியானது (Photos) | 300 Sri Lankans Stranded In International Waters

4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US