தலைநகர் கொழும்பில் மரங்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து
கொழும்பு நகர மக்களுக்கு ஆபத்தான மரங்களை அகற்றும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்காக மாநகர சபை ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் அபாயகரமான 300 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் தலையீட்டில் மரங்களை அகற்றும் வேலைத்திட்டத்திற்கான பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மரங்களால் ஆபத்து
ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு மரங்களை ஆய்வு செய்வதற்காக பேராதனை தாவரவியல் பூங்காவில் இருந்து நிபுணத்துவ பரிசோதகர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மரத்திற்கு மரம் சென்று மரங்களை பார்வையிடுவார் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
மேலும், நகராட்சியில் கணிசமான அளவு மரம் வெட்டும் கருவிகள் இருப்பதாகவும், தேவைப்பட்டால், தனியார் துறையை தொடர்பு கொண்டு, அதற்கான உதவிகளை பெறுவதாகவும் அவர் கூறினார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri