நாடளாவிய ரீதியில் பதிவான 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
இந்த ஆண்டு ஆரம்பமானது முதல் மார்ச் 12 வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்; நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 17 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஏனைய 13 சம்பவங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளால் உருவானவை என்று நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.