கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஆபத்து - சுகாதார அமைச்சு எச்சரிக்கை
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆபத்தான திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதியில் வாழும் மக்களில் நூற்றுக்கு 20, 30 வீதமானோருக்கு டெல்டா கொவிட் மாறுபாடு தொற்றியிருக்கலாம் என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி 19 டெல்டா தொற்றாளர் 19 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களில் அதிகமானோர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.
இந்த தொற்றாளர்கள் 19 பேருடன் சேர்த்து இலங்கையில் இதுவரையில் 38 பேர் டெல்டா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அதற்கமைய இதுவரையில் டெல்டா தொற்றுக்குள்ளாகிய நபர்கள் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களாகும்.
டெல்டா தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களை விடவும் அதிகமானோர் சமூத்தில் இருக்க கூடும்.
இதனால் உரிய சுகாதார முறையை பின்பற்றுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri