முப்பது கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த “அகுலனே கூடு சன” என்பவருக்குச் சொந்தமான முப்பது கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் அமைந்துள்ள அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணை
நாட்டின் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரான இரத்மலானை குடு அஞ்சுவின் நெருங்கிய உறவினரான "அகுலனே குடு சானா" மற்றும் சந்தேக நபரின் தாயார் (குடு ஸ்ரீமதி), சந்தேகநபரின் மனைவி மற்றும் சகோதரர் (அகுலனே பொடி மான்) ஆகியோர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் எனவும், போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது
இந்நிலையில், குறித்த சொத்துக்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப்பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 11 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam