அம்பாறையில் புதையல் தோண்டிய மூன்று இளைஞர்கள் கைது
தெஹியத்தகண்டிய அருகே முவகம்மன பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து இருந்து புதையல் தோண்டப் பயன்படும் அகழ்வு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்கள் அக்குரஸ்ஸ, போகஸ்வெவ மற்றும் தெஹியத்தகண்டியவைச் சேர்ந்தவர்கள் என்றும், முறையே 24, 27 மற்றும் 37 வயதுடைய வாலிபர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து தெஹியத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் மதகுரு..! பொலிசாரின் அறிக்கைக்கு மறுப்பு
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan