துரத்தித் துரத்தி மூவர் மீது வாள் வெட்டு தாக்குதல் - ஒருவர் பலி - இருவர் படுகாயம்
இரத்தினபுரியில் வாள்வெட்டுத் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எஹெலியகொட பொலிஸ் பிரிவின் நெதுர சந்திப்பில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
வாள் வெட்டுக்கு உள்ளானதில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வாள் வெட்டு தாக்குதல்
எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் இடமல்கொட பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் எஹெலியகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குற்றச்சொயலில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 14 மணி நேரம் முன்

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி News Lankasri

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri
