பிள்ளையான் உட்பட மூவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு துப்பாக்கியால் 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூவரும் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(01.09.2026) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே காணொளி ஊடாக இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையான் உட்பட மூவர்..
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட பிள்ளையான், கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
பிடியாணை உத்தரவு
இதனைத் தொடர்ந்து, காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரும் கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றப் புலனாய்வுத்துறையினர் கைது செய்திருந்தனர்.
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜுன் 17ஆம் திகதி குற்றப் புலனாய்புத்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று(01) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் எடுத்துக் கொண்டபோது சந்தேக நபர்களான பிள்ளையான், இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகிய 3 பேரும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதுடன், லண்டனில் உள்ள முகமட் பாயிஸ் எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. சாதனை படைத்த நிவின் பாலி Cineulagam