சஜித் தரப்பு முக்கியஸ்தர்கள் மூவர் கட்சியை விட்டு வெளியேற தீர்மானம்
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் மூவர் கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர்.
முக்கியமான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர்.
இந்த மூவரும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் ரணிலுடன் இணைந்து செயற்படுவது குறித்து தொடர்ச்சியாக பேசியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான விமர்சனங்கள்
ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் இந்த யோசனையை முன்வைத்த மூவருக்கு எதிராகவும் எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்குக் கூட வேட்பு மனு வழங்கக் கூடாது என இந்த மூவருக்கு எதிராகவும் கட்சியின் சிலர் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
