3 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 3 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படை ஒரு படகுடன் மூன்று கடற்தொழிலாளர்களை கைது செய்துள்ளது.
இந்த நிலையில் படகையும் கடற்தொழிலாளர்களையும் விசாரணைகளின் பின் நீரியல்வள துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரியவருகிறது.
வழக்குத்தாக்கல்
கைதானவர்கள் மீது இலங்கை நீர் பரப்பு எல்லைக்குள் அடக்கிய யாழ்ப்பாண கடற்பரப்புக்குள் தலைமையதிபதியால் வழங்கப்படும் வெளிநாட்டு மீன்பிடி வள்ளம் தொடர்பிலான அனுமதிப்பத்திரம் இல்லாது கடல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டமை, மேற்கூறிய அனுமதி பத்திரம் இன்றி இலங்கை நீர்பரப்பு எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி உபகரணங்களை (வலை) படகு நிற்கின்ற வரைக்கும் தொடக்கறுத்து வைக்காமை, நெடுந்தீவு கடற்பரப்புக்குள் இழுவை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நீரியல் வளத்துறையினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

