இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் இந்திய கடலோர காவல் குழும பொலிஸாரால் கைது
இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளி இணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் திசைமாறி இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதியில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படும் நிலையில் கைதாகியுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஸ்பவனம் கடற்பகுதியில் பலத்த காற்றால் திசைமாறி கரை சேர்ந்த இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் 3 பேரையும் கடலோர காவல் குழும பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன், ரீகன் , குருபரன் ஆகிய 3 பேருமே இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

