கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய 3 வர்த்தகர்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு கோடி 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் குறித்த மூன்று சந்தேக நபர்களும் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அபராதம் விதிப்பு
அவர்கள் அளுத்கம, யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்ல பகுதிகளில் வசிக்கும் மூன்று வணிகர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களின் பொதிகளில் இருந்து 119,000 பிளாட்டினம் வகை சிகரெட்டுகள் அடங்கிய 595 சிகரெட் அட்டைப் பெட்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று நபர்களையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.